சனி, 4 ஜூலை, 2009

நெல்லையில் ஊதிய உயர்வுகோரி பயிற்சி மருத்துவர்கள் பேரணி



நெல்லையில் ஊதிய உயர்வுகோரி, பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு வழங்கக்கோரி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவர்கள் புதன்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து, நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

பணிசாரா முதுநிலை பட்டதாரி மருத்துவ மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம், ஊதியமும், பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.12ஆயிரம் ஊதியமும் வழங்கக்கோரி இவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.



இந்நிலையில் இன்று பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலையிலிருந்து தங்களது கோரிக்கைகைள வலியுறுத்தி ஊர்வலமாக மார்கெட் பகுதிவரை பேரணியில் ஈடுபட்டனர். இதில் மருத்துவர்கள் ரீனா, ஸ்ரீதேவி, வினில் குமார், இளமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



செல்வா, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin