வியாழன், 25 ஜூன், 2009

நெல்லை பொருள்காட்சி: இன்று முதல் நுழைவுக் கட்டணம்

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் அரசு பொருள்காட்சியில் வியாழக்கிழமை (ஜூன் 25) முதல் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட செய்தி-மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி பொருள்காட்சித் திடலில் அரசு பொருள்காட்சி கடந்த 20-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், செய்தி-மக்கள் தொடர்பு, காவல் துறை, ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வனத் துறை, வேளாண்மை, மீன்வளம், வருவாய், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் மூலம் 20 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர தனியார் நிறுவனங்களாலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களின் பொழுதுபோக்குக்காக ராட்சத ராட்டினங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தினமும் பிற்பகல் 3 முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இப் பொருள்காட்சியில் வியாழக்கிழமை முதல் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். பெரியவர்களுக்கு ரூ. 5-ம், சிறுவர்களுக்கு ரூ. 3-ம் வசூலிக்கப்படும். தினமும் மாலை அங்குள்ள கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருள்காட்சி 45 நாள்கள் நடைபெறும். பொருள்காட்சியைப் பார்க்க அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin