
தூத்துக்குடியில் குரங்கு, கரடி, யானை என பிச்சை எடுத்து வந்தவர்கள் தற்போது ஓட்டகத்தை வைத்து பிச்சை எடுத்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக ராஜாஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தூத்துக்குடியில் உள்ள வணிக நிறுவனங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஓட்டகத்தை வைத்து பிச்சை எடுத்து வருகின்றனர். ஓட்டகத்திடம் ஒரு தகடை காண்பித்து ஆசி பெற்றுத் தறுவது போல நூதன முறையில் பணம் வசூல் செய்து வருகின்றனர்.
பணம் எதுவும் கொடுக்கவில்லை என்றால் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை. தூத்துக்குடியில் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பிராதன சாலைகளில் ஓட்டகத்தை நிறுத்தி இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
வன உயிரினங்களை வைத்து பிச்சையெடுக்க கூடாது என அரசு தடை விதித்துள்ளபோதும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஓட்டகத்தை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம் புதிதாக தெரிவதால் தூத்துக்குடி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
முருகன்.ஆர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக