வெள்ளி, 26 ஜூன், 2009

தூத்துக்குடியில் சிறுதொழில் கடன் வாங்க குவிந்த இளைஞர்கள்


தூத்துக்குடி சிறுதொழில் சங்க அலுவலகத்தில் பிரதமரின் வேலை உருவாக்கும் கடன் திட்ட பற்றிய சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கத்தின் சார்பில் நகரம் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு பிரதமரின் தொழில் வேலைவாய்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் கடன் வழங்கும் முகாம் இன்று தூத்துக்குடி சிறுதொழில் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இதில் 200க்கும் அதிகமான பெண்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு முகாம் பற்றிய விபரங்களை கேட்டறிந்தனர். இதில் புதிததாக தொழில் துவங்குவதன் மூலம் பாரத பிரதமரின் வேலை உருவாக்கும் கடன் திட்டம் உருவாக்கப்பட்டு அதன் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.25லட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு ரூ.10லட்சம் வரையிலும் கடன் உதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் கிராமப்புற பயனாளிகளுக்கு 25சதவீத மானியமும், சிறப்பு பிரிவினருக்கு 35 சதவீத மானியமும் வழங்கப்படும். பொது பிரிவினர் 10சதவீத தொகையையும், சிறப்பு பிரிவினர் 5சதவீத தொகையையும் பங்குத் தொகையாக கடன் பெறும் வங்கியில் செலுத்த வேண்டும்.

மொத்த மதிப்பீட்டில் 90 முதல் 95 சதவீதம் வரை வங்கி கடன் கிடைக்கும். 2009-10ம் ஆண்டிற்கான விண்ணப்பங்களின் தேர்வு இன்று நடைபெற்றது. இதில் சிறுதொழில் சங்க செயலாளர் என்.ஜெயராமன், மாவட்ட தொழில் மையத்தின் உதவி செயற் பொறியாளர் சொர்ணலதா, சிறுதொழில் சங்க ஆலோசகர் ஆ.ராசையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளிடம் தொழில் மற்றும் கடன் வசதி பற்றிய ஆலோசனைகளை வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை சிறுதொழில் சங்க பொதுச் செயலாளர் கே.நேருபிரகாஷ், திட்ட அலுவலக மேலாளர் குணதுரை ஆகியோர் செய்திருந்தனர்.

பாரத பிரதமரின் வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் கடன் தொகை பெறுவதற்கும், அதற்கான பயிற்சி பெறுவது உள்ளிட்ட விபரங்கள் தெரிந்துகொள்ள தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம், 15சி, நந்தகோபாலபுரம், தூத்துக்குடி என்ற முகவரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 0461-2336005 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

முருகன்.ஆர் (படம்: இருதயராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin