வெள்ளி, 26 ஜூன், 2009

பிரபல பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் காலமானார்


உலகம் முழுவதும் கோடிக்கணக் கான ரசிகர்களை தன்னுடைய இசை யால் மயக்கி வந்த பாப் இசை அரசன் என்று பாராட்டப்பட்ட மைக்கேல் ஜாக்சன் மாரடைப்பால் மரணமடைந் தார்.

அவருக்கு வயது 50. அடுத்த மாதம் 13ந் தேதி தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்தது, அவரது ரசிகர்களையும், இசை யுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஜாக்சன் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் இசை வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் வருமாறு:

* ஆகஸ்ட் 29, 1958ல் அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள கேரியில் பிறந்தார்.

* 1962ல் தன்னுடைய 4 சகோதரர்களோடு இணைந்து ஜாக்சன்5 எனும் இசைக்குழு மூலம் அறிமுகமானார்.

* 1969ல் ஜாக்சன் குழுவுக்கு டெட்ராய்ட் நகரை சேர்ந்த இசைத்தட்டு நிறுவனத்திடமிருந்து முதல் ஒப்பந்தம் கிடைத்தது. மைக்கேல் ஜாக்சனின் குரல் அவரது இசைக்குழுவை புகழ் பெற வைத்தது.

* 1970ல் மைக்கேல் ஜாக்சன் தனியேவும் பாடத் தொடங்கினார்.

* 1979ல் குவின்சி ஜோன்ஸ் தயாரிப்பில் "ஆப் தி வால்' ஆல்பம் வெளியாகி ஒரு கோடிக்கு மேல் விற்பனையானது.


* 1982ல் திரில்லர் ஆல்பம் வெளியானது. பீட் இட், பில்லி ஜீன் உள்ளிட்ட பாடல்களை கொண்ட இந்த ஆல்பம் 5 கோடிக்கு மேல் விற்பனையாகி அவரை இசையுலகின் ஆக சிறந்த பாடகர்களில் ஒருவராக உயர்த்தியது.

* 1984ல் பெப்சி விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவருடைய முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இதே ஆண்டில் 8 கிராமிய விருதுகளை வென்று சாதனை படைத்தார்.

* 1985ல் ஏடிவி மியூசிக் எனும் இசை நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதே ஆண்டு "வி ஆர்த வேர்ல்டு' எனும் பாடலை ஆப்பிரிக்க வறுமையை போக்குவதற்காக எழுதினார்.


* 1987ல் "பேட்' எனும் ஆல்பம் வெளியானது. 2.60 கோடிக்கு மேல் விற்பனையானது.

* 1988ல் மைக்கேல் ஜாக்சனின் சுயசரிதை "மூன் வாக்' வெளியானது.

* 1990ல் மைக்கேல் ஜாக்சன் முதல் முறையாக அறுவை சிகிச்சை முகமூடி அணிந்து காணப்பட தொடங்கினார்.

* 1992ல் டேஞ்சூரஸ் ஆல்பம் வெளியானது.

* 1992ல் 13வது சிறுவனின் தந்தை ஜாக்சன் தன்னுடைய மகனை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


* 1994ல் மைக்கேல் ஜாக்சன் புகழ் பெற்ற பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் மகள் லிசா மேரியை மணந்து கொண்டார். 2 ஆண்டுகளில் விவாகரத்து.

* 1995ல் ஹிஸ்டரி ஆல்பம் வெளியானது.

* 1996ல் டெபி ரோ எனும் நர்சை மணந்து கொண்டார். 3 ஆண்டுகள் கழித்து விவாகரத்தானது.

* 2001ல் "இன்வின்சிபில்' ஆல்பம் வெளியானது.

* 2002ல் இசைத்தட்டு நிறுவனங்கள் பாடகர்களை குறிப்பாக கருப்பின பாடகர்களை சுரண்டுவதாக மைக்கேல் ஜாக்சன் போர்க்கொடி எழுப்பினார்.
* அதே ஆண்டு நவம்பர் மாதம் மைக்கேல் ஜாக்சன் ஜெர்மனியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது தன்னுடைய 9 மாத குழந்தை பிரின்ஸ் மைக்கேலை தலைகீழாக தொங்கவிட்டு பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.

* 2003ல் ஏல நிறுவனம் ஒன்று அவர் வாங்கிய ஓவியங்களுக்கான தொகையை கொடுக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தது.

* இதே ஆண்டு பிப்ரவரி மாதம் ஐ டிவியில் மைக்கேல் ஜாக்சன் தொடர்பான செய்திப்படம் வெளியானது. அவருடைய மேலாளர் சம்பள பாக்கிக்காக வழக்கு தொடர்ந்தார். நவம்பர் மாதம் ஜாக்சனின் கலிபோர்னியா பண்ணை வீட்டில் ரெய்டு நடைபெற்றது. சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் ஜாக்சன் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 20ந் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். டிசம்பர் மாதம் அவர் மீது இந்த வழக்கில் அதிகாரபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டது.


* 2004ல் மைக்கேல் ஜாக்சன் முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்று தன் மீதான புகாரை மறுத்தார்.

* 2005ல் ஜாக்சன் வழக்கில் விசாரணை தொடங்கியது. அனைத்து புகாரிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

* இந்த ஆண்டு மார்ச் மாதம் மைக்கேல் ஜாக்சன் மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக அறிவித்தார். இந்த நிகழ்ச்சிக்காக தீவிரமாக தயாராகி வந்த நிலையில் கால தேவன் அவரை உலகிலிருந்து பிரித்து சென்றார்.



ஜாக்சனின் பல முகங்கள்

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை மாற்றி அமைத்து வந்த மைக்கேல் ஜாக்சன், உண்மை யிலேயே பல முகங்களை கொண்டவர். 5 வயதில் இசையுலகில் அடியெடுத்து வைத்த அவர், அறிய ஆற்றல் கொண்ட குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார்.
.
கணக்கில்லாமல் செலவு செய்த அவர், நன்கொடையாகவும் வாரி வழங்கியிருக்கிறார். நீரிழிவு ஆய்வு மற்றும் புற்றுநோய் கழகத்திற்காக அவர் கோடிக்கணக்கான தொகையை நிதியாக திரட்டி தந்தார்.

பெப்சி நிறுவனம் நஷ்டஈடாக அளித்த 1.5கோடி டாலர்களை அவர் நன்கொடையாக வழங்கி விட்டார். இப்படி மனிதநேயம் மிக்கவராக விளங்கிய ஜாக்சன், இசையுலகின் சூப்பர் ஸ்டாராகவும் புகழ் பெற்றார். தன்னுடைய நடனத் திறமையின் மூலம் வீடியோ நட்சத்திரமாகவும் அவர் உருவானார்.

இவற்றை தவிர ஜாக்சன் அதீதமான பழக்க வழக்கங்களை கொண்ட புரிந்து கொள்ள முடியாதவராகவும் கருதப்பட்டார்.

கடைசியில் கடனாளி

மைக்கேல் ஜாக்சன் இசையின் மூலம் புகழ் பெற்றதோடு கோடி களுக்கு அதிபராகவும் விளங்கியவர். பாப் இசை ஆல்பம் வெளியீட்டை மாற்றியமைத்த மைக்கேல் ஜாக்சன், கோடிகள் புரளும் வர்த்தகத்தின் மையமாகவும் விளங்கினார்.
.
அவருடைய பாடல்கள் ஒவ் வொன்றும் விற்பனையில் சாதனை படைத்து வருவாயை குவித்தது. ஆல்பங்கள் அள்ளித் தந்தன.
இசை நிறுவனத்தை விலைக்கு வாங்கியதன் மூலம் மேலும் செல்வந்தரானார். 1988ல் அவர் நவர்லாண்டு பண்ணை வீட்டை விலைக்கு வாங்கினார். 2500 ஏக்கர் பரப்பில் சொர்க்கலோகம் போல இந்த வீடு அமைந்திருந்தது.

ஆனால் கோடிகளுக்கு அதிபராக விளங்கிய அவர் பின்னர் சர்ச்சைகள் மற்றும் வழக்குகளில் சிக்கி கடனாளி ஆனார். சமீப ஆண்டுகளில் மேடை யேறுவதை விட கோர்ட் படிகளில் அதிகம் ஏறி இறங்கிய மைக்கேல் ஜாக்சன், வழக்கு செலவுகளுக்காக கணக்கில்லாமல் கடன் வாங்கினார். இதனால் இறக்கும் போது அவர் கடனாளியாகவே இறந்ததாக கூறப்படுகிறது.

ஐம்பதுகளி்ல் புகழ்பெற்று வாழ்ந்த அமெரிக்க இசைக்கலைஞர், நடிகர் சம்மி டேவிஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 1990-ல் மைக்கேல் ஜாக்சன் பாடிய கவிதை வரிகள், தமிழில்...

நீ இருந்தாய்!


நாங்கள் வருவதற்கு முன்பே நீ இருந்தாய்.

வலியையும் அவமானத்தையும் தாங்கிக் கொண்டாய்.

உனது வழியில் பலர் தடைகளை எழுப்பினர்.

அவர்களை வீழ்த்தினாய். நீயே வென்றாய்.

இது சரியல்ல என அவர்களுக்குப் போதித்தாய்.

அவர்களையே உன்னைக் கொண்டாடச் செய்தாய்.

ஆம். அப்போது நீ இருந்தாய்.

இப்போது நாங்கள் நடந்து செல்ல வழி இருக்கிறது.

எல்லோரும் பார்க்கும்படியாக

முடிந்தவரை நன்றாகவே நாங்கள் இருக்கிறோம்.

இதோ நானும்கூட இருக்கிறேன்.

ஏனெனில், நீ இருந்தாய்.

"ஒரு கருப்புக் குயிலின் கானம் ஓய்ந்து விட்டது. ஒரு கருப்பனின் மரணம் வெள்ளை மனிதனின் கண்ணில் கூட நீரை வரவழைத்து விட்டது. இசையின் மகத்துவம் தான் இது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ற சீர்காழியின் அந்த வரிகள் காதில் கேட்கிறது" கருத்துக்கு நன்றி:ரவிக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin