.jpg)
தமிழக அரசு சார்பில் 45 நாட்கள் நடக்கும் அரசு பொருட்காட்சி நெல்லையில் துவங்கியது.
நெல்லை, சேலம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு பொருட்காட்சி வழக்கமாக நடந்து வருகிறது. நெல்லையில் இந்த ஆண்டு 13வது அரசு பொருட்காட்சி சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர் பரிதிஇளம்வழுதி தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.
பொருட்காட்சியில் அரசு துறையின் சார்பில் கல்விதுறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, வேளாண்துறை, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 20 அரங்குகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
.jpg)
45 நாட்கள் நடக்கும் இந்த பொருட்காட்சியில் ராட்டினங்கள் உள்ளிட்ட தனியார் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறுகின்றன. பொருட்காட்சிக்கு பெரியவர்களுக்கு ரூ.5ம், சிறியவர்களுக்கு ரூ.3ம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பொதுமக்கள் பொருட்காட்சியை கண்டுகளிக்க வசதியாக தினமும் மாலை 3மணி முதல் இரவு 11மணி வரை அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தகவல் : தூத்துக்குடி வெப்சைட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக