ஞாயிறு, 28 ஜூன், 2009

நெல்லையில் செல்போன் பேசியபடி பைக் ஓட்டிய 60 பேருக்கு அபராதம்

நெல்லையில் வாகனங்களில் செல்லும்பொழுது செல்போனில் பேசியதற்காக 60பேருக்கு காவல்துறை அபாரதம் விதித்துள்ளது.

கடந்த வாரம் சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டினால் மோட்டார் வாகன லைசன்ஸ் ரத்து செய்யப்படும். மேலும் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நெல்லையில் திடீரென போக்குவரத்து போலீசார் செல்போன் பேசியபடி இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 60பேருக்கு அபாரதம் விதித்தனர். இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷ்னர் ஜெயசந்திரன் கூறுகையில், தினமும் இந்த சோதனை நடத்தப்படும். மேலும் நடந்து கொண்டே செல்போனில் பேசியவாறு சென்றவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

செல்வா, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin