செவ்வாய், 23 ஜூன், 2009

தூத்துக்குடியில் காசநோய் விழிப்புணர்வு பேரணி : ஜெயதுரை எம்.பி. துவக்கி வைத்தார்


தூத்துக்குடி மாவட்ட காசநோய் விழிப்புணர்வுக்கான மோட்டார் வாகன பிரச்சாரத்தை தூத்துக்குடி தொகுதி எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையம் சார்பில் நான்கு நாள் விழிப்புணர்வு மோட்டார் வாகன பிரச்சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் தலைமை வகித்தார். மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் (காசநோய்) சுப்பையா முன்னிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்

எஸ்.ஆர். ஜெயதுரை எம்.பி., மோட்டார் சைக்கிள் பிரசாரப் பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த சுற்றுப் பயணம் வரும் 25-ம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது.

ஏரல், தென்திருப்பேரை, சோனகன்விளை, காயாமொழி, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் ஆகிய இடங்களில் முதல் நாள் பிரசாரம் நடைபெற்றது. 2-ம் நாளில் சாத்தான்குளம், நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், வல்லநாடு, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், 3-ம் நாளில் மாப்பிள்ளையூரணி, குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், கடலையூர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், கடைசி நாள் நாலாட்டின்புதூர், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர், பசுவந்தனை, ஓட்டப்பிடாரம் வழியாக தூத்துக்குடியில் முடிவடைகிறது. 20 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin