சனி, 20 ஜூன், 2009

பழகுநர் உரிமம் பெற்றவர் விபத்து ஏற்படுத்தினால் அவரே இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு


பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற்றவர் விபத்து ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்டவருக்கு அவர் தான் இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ் (எ) மணிராஜ் (வயது 17) எ‌ன்பவ‌ர் கடந்த 2002 டிசம்பர் 5ல் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது 60 வயது முதியவர் மீது மோதியதில் அவர் இறந்தார். அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கோரி, கீழ்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் இறந்த முதியவர் குடும்பத்துக்கு ரூ.ஒரு லட்சத்து 90,066 நஷ்டஈடு தொகையை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். இந்த பணத்தை ராஜேஷ் மணிராஜிடம் இன்சூரன்ஸ் நிறுவனம் திரும்ப வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ராஜேஷ்மணிராஜின் தாயார் ஞானசெல்வம், மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார். இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்து நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தர‌வி‌ல், பழகுநர் உரிமம் வைத்திருப்பவர் வாகனத்தை ஓட்டிச்செல்லும் போது, அவருக்கு பின்னால் அமர்ந்து, ஓட்டுனர் உரிமம் பெற்ற ஒருவர் வாகனம் ஓட்ட கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது விதி.

ஆனால், மனுதாரர் மகன் தனியாகவே வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். எனவே, அவரது வாகனத்தில் சிக்கி இறந்தவர் குடும்பத்துக்கு அவர் தான் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை மனுதாரரிடம் வசூலிக்க வேண்டும் என கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியானது எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin