சனி, 20 ஜூன், 2009

பிரீபெய்டு வாடிக்கையாளருக்கும் ஜி.பி.ஆர்.எஸ் வசதி தரும் பிஎஸ்என்எல்!


தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே இது பெரிய செய்திதான். பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு திட்டத்தில் உள்ள வாடிக்கையாளரும் இனி ஜிபிஆர்எஸ் வசதியை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

ஒரு நாளைக்கு ரூ.20 கட்டணம் செலுத்தி தங்கள் மொபைலிலேயே வரம்பற்ற (அன்லிமிடெட்) அளவு பிரவுசிங் செய்து கொள்ளலாம்.

இதற்கான டாப் அப் கார்டுகள் தனியாகக் கிடைக்கின்றன. மொத்தமாக வாங்க வேண்டியதில்லை. ஒரு நாள் மட்டும் உபயோகப்படுத்த விரும்புபவர்கள் ரூ.20 மட்டும் செலுத்தி ஜிபிஆர்எஸ் கார்டு வாங்கி 24 மணிநேரம் தடையில்லாமல் தாங்கள் விரும்பிய தளங்ளை மொபைலிலேயே பிரவுஸ் செய்து பார்த்துக்கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் இதற்கான முழு விவரங்கள் கிடைக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin