திங்கள், 22 ஜூன், 2009

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு 65% சம்பளக் குறைப்பு!


உலகம் முழுக்க விமானப் போக்குவரத்தில் பெரும் மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் பல விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்க ஆரம்பித்துள்ளன.

இதில் லேட்டஸ்ட் வரவு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.

இந்த நிறுவனம் நேற்று தனது விமானிகள் மற்றும் ஊழியர்களுடன் சம்பளக் குறைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துட்டுள்ளது.

அதன்படி பைலட்டுகள் மற்றும் கேபின் ஊழியர்கள் 65 சதவிகித சம்பளக் குறைப்புக்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

மேலும் மாத்துக்கு ஒருமுறை சம்பளமின்றி விடுப்பு எடுத்துக் கொள்ளவும் சம்மதித்துள்ளனர்.

நிர்வாகப் பிரிவின் கீழ் வரும் 2000 ஊழியர்கள் 10 முதல் 20 சதவிகித சம்பளக் குறைப்புக்கும், ஒரு நாள் சம்பளமற்ற விடுப்புக்கும் சம்மதித்துள்ளனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் வருமானம் இந்த ஆண்டு மட்டும் 92 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த நிதியாண்டு இறுதியில் நிலை இன்னும் மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin