ஞாயிறு, 28 ஜூன், 2009

முஸ்லீம் நாடுகளுக்கான யு.எஸ். பிரதிநிதியாக இந்தியப் பெண் பாரா தேர்வு

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனின் முஸ்லீ்ம் பிரதிநிதியாக ஜம்மு காஷ்மீரைப் பூர்வீமாகக் கொண்ட பாரா பான்டித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகெங்கும் உள்ள முஸ்லீம்களுக்கும், ஹில்லாரிக்கும் இடையிலான பாலம் போல செயல்படப் போகிறார் பான்டித். இதற்காக இவருக்கு முஸ்லீம் நாடுகளுக்கான சிறப்பு பிரதிநிதி என்ற பதவி தரப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம்தான் பான்டித்தின் பூர்வீகமாகும். இந்த வாரத் தொடக்கத்தில் பான்டித்தின் நியமனம் அறிவிக்கப்பட்டது.

உலகெங்கும் உள்ள முஸ்லீம் சமுதாயத்தினரை அமெரிக்காவின் நண்பர்களாக்கும் முயற்சியில் அதிபர் ஒபாமா தீவிரமாக உள்ளார். அதன் ஒரு படியாகவே தற்போது பான்டித் புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஹில்லாரி வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் முஸ்லீம் நாடுகளுக்கான சிறப்பு பிரதிநிதியாக இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பாரா பான்டித்தை நியமிப்பதில் பெருமை அடைகிறேன்.

தனது முழு அனுபவத்தையும் இந்தப் புதிய பணிக்கு பாரா பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன். உலகெங்கும் உள்ள முஸ்லீம்களை இணைக்கும் முயற்சிக்கு அவர் பெரும் பங்காற்றுவார் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin