புதன், 27 மே, 2009

காவல் துறைக்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை கோரிக்கை

காயல்பட்டினத்தில் நிகழ்ந்த கொள்ளை, கொலை முயற்சி சம்பவங்களில் தொடர்புடையோரை விரைந்து கண்டுபிடித்து சட்டப்பூர்வ தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் ஐக்கிய பேரவை கோரியுள்ளது.

இதுதொடர்பாக பேரவை சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர், ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள மனு:

காயல்பட்டினத்தில் கடந்த 3-ம் தேதி கொலை முயற்சி, அரிவாள் வெட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால், இப் பகுதி மக்கள் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு காயல்பட்டினத்தில் உள்ள பிரபல வணிகர் வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த 2 சம்பவங்களிலும் தொடர்புடையோர் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்களுக்கு சட்டப்பூர்வ தண்டனை கிடைக்க போலீஸôர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin