திங்கள், 25 மே, 2009

தோழப்பன் பண்ணையில் புதிய டிரான்ஸ்பார்மர்

ஸ்ரீவைகுண்டம்,தோழப்பன் பண்ணையில் ஏற்கனவே உள்ள டிரான்ஸ் பார்மர் குறைந்த மின் அழுத்தத்தில் இருந்ததால், கிராம மக்களுக்கு போதுமான மின்சாரம் கிடைக்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஊர் பொது மக்கள் மனு அளித்தனர்.

இதையடுத்து தற்போது மேலும் 100 கிலோ வாட் மின்சக்தி கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நடந்தது.

இந் நிகழ்ச்சிக்கு தோழப்பன் பண்ணை பஞ்சா யத்து தலைவர் பார்வதி தலைமை தாங்கினார். இ¢ந் நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் சத்திய மூர்த்தி, உதவி செயற்பொறியாளர் முத்தானந்தம், உதவி மின் பொறியாளர் உமை யொருபாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin