திங்கள், 30 மார்ச், 2009

மனித நேய மக்கள் கட்சி அ.தி.மு.க.,உடன் கூட்டணியா?

தி.மு.க.,கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி நீடிக்க முடியாத சூழலில் அ.தி.மு.க.,வில் இரண்டு சீட்கள் பெற முயற்சிகள் நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மனித நேய மக்கள் கட்சி 2 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டது. தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ஆகியோரிடம் தி.மு.க.,தரப்பினர் போனில் பேசினர்.

ஆனால் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மனிதநீதி கட்சிக்கு எந்ததொகுதியும் ஒதுக்கப்படவில்லை. அக்கட்சியை பொறுத்தவரை முதன்முதலாக பொதுத்தேர்தலில் போட்டியிடுவதால் 2 சீட் பெறுவதோடு தங்களின் சொந்த சின்னத்திலேயே போட்டியிடவும் தீர்மானித்திருந்தனர். தி.மு.க.,கூட்டணியில் இருந்து கடைசிநேரத்தில் கழற்றிவிடப்பட்டால் அ.தி.மு.க.,கூட்டணியில் இடம்பிடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. தி.மு.க.,விற்கு விதித்த அதே கண்டிசன்களை அ.தி.மு.க.,ஏற்றுக்கொள்ளும் சூழலில் பெரும் திருப்பமாக அ.தி.மு.க.,அணி பலம்பெறும். தி.மு.க.,அணியில் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலூர் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் ம.ம.க,,போட்டியிட வாய்ப்புள்ளது.

இறைவன் நாட்டப்படிதான் அனைத்தும் நடக்கும்.

தகவல் :அதிரை எக்ஸ்பிரஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin