ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

லாலு பிரசாத்யாதவ்


தேர்தல் அறிவித்தாலும் அறிவித்தார்கள் அரசியல் தலைவர்கள் தங்களுடைய அதிரடி பேச்சுக்களால், அரசியல் களத்தை சூடாக்கி கொண்டு இருக்கிற்றார்கள் .தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களின் தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று வன்முறை பேச்சை தொடங்கிவைத்தார் வருண்காந்தி. அதை தொடர்ந்து ஒரு கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ, 'இந்துத்துவாவை எதிர்ப்பவர்களின் கழுத்தை வெட்டவேண்டும் என்றார். இப்போது இவர்களையெல்லாம் தாண்டி, ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்யாதவ்,நான் மட்டும்உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருன்காந்தியின் மார்புமீது ரோடுரோலரை ஏற்றியிருப்பேன்.முஸ்லிம்களுக்கு எதிராக இதுபோன்று தொடர்ந்து பேசுவதை தடுப்பதற்காக அவரை நசுக்கி அளித்திருப்பேன் என்று லாலு பேசியதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

முஸ்லிம்களுக்கு ஆதரவான லாலுவின் இந்தபேச்சு விசயத்தில் முஸ்லிம்கள் என்ன முடிவு எடுக்கவேண்டுமெனில் , லாலுவின் இந்த வன்முறை பேச்சை முஸ்லிம்கள் ஒருபோதும் ஆதரிக்கமுடியாது. ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்;

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.5:8 .

வருண்காந்தி முஸ்லிம்களுக்கு எதிராக பேசினார் என்பதால் அவர்மீது நமக்குள்ள வெறுப்பு, வருனையும் தாண்டி லாலு பேசியுள்ள மற்றொரு வன்முறை பேச்சுக்கு ஆதரவாக மாறிவிடக்கூடாது. வருன் பேசியதையொட்டி சட்டம் அவர்மீது நடவடிக்கை எடுத்து அவர் கம்பி என்னும் நிலையில் லாலு இவ்வாறு பேசியிருக்கவேண்டிய அவசியமுமில்லை.

ஒரு முஸ்லீம் எந்த விஷயத்தையும் இறைமறை-இறைத்தூதர் வழியில்தான் அணுகவேண்டும் மாறாக உணர்ச்சிகளின் அடிப்படையில் அணுகக்கூடாது. மேலும் மத மோதலை உண்டாக்கும் வகையில் தொடரும் இதுபோன்ற பேச்சுக்களை யார் பேசினாலும் சட்டம் தன் கடமையை செய்து மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கவேண்டும். அதுதான் ஜனநாயகமும் கூட!


தகவல் : S.M.S. ஹமீது, துபாய்

1 கருத்து:

  1. நெல்லைத்தமிழ் இணையத்தில் தங்களது ஆக்கம் புக்மார்க் செய்யப்பட்டுள்ளது. தாங்கள் விரும்பினால் இத்தளத்தில் தொடர்ந்து உங்கள் படைப்புக்களை பதிவு செய்யலாம்.
    தளமுகவரி
    nellaitamil

    பதிலளிநீக்கு

LinkWithin

Blog Widget by LinkWithin