வியாழன், 25 பிப்ரவரி, 2010

ஸ்ரீவை., ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ஸ்ரீவைகுண்டத்தில் அரசு ஆஸ்பத்திரியில் ஜெ.,பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கினர்.விழாவிற்கு பள்ளத்தூர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மணிமொழியன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் மோதிரம் வழங்கினார். விழாவில் மாவட்ட பொறுப்பாளர் ஜெனிபர்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகநயினார், கருங்குளம் சிவசுப்பிரமணியன், பெருங்குளம் செல்லத்துரை, நகர செயலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் பால்துரை, நகர அவைத் தலைவர் ராஜேந்திரன், துணைச் செயலாளர் மந்திரமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் ராஜாராமன், பாசறை துணை செயலாளர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin