வியாழன், 10 டிசம்பர், 2009

ஈடிஏ கிரிக்கெட் சாம்பிய‌ன்களுக்கு பரிசளிப்பு விழா


துபாய் ஈடிஏ மெல்கோ நிறுவ‌ன‌த்தின் சார்பில் ந‌டைபெற்ற‌ கிரிக்கெட் போட்டியில் சாம்பிய‌ன் ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிச‌ளிப்பு விழா ந‌டந்ததது.

சாம்பிய‌ன் ப‌ட்ட‌ம் வென்ற‌ ஊழியர்க‌ளுக்கு டிராஃபியும், நிக‌ழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிசுக‌ளும் வ‌ழ‌ங்க‌ப்பட்ட‌ன‌.

விழாவில் ஈடிஏ மெல்கோ ம‌னித‌வ‌ள‌ மேம்ப்பாட்டுத்துறை மேலாள‌ர் சிக்க‌ந்த‌ர் பாட்சா பேசுகையில், ஈடிஏ மெல்கோவில் ந‌ல‌த்துறை துவ‌க்க‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர் அது மேற்கொண்டு வ‌ரும் ப‌ல்வேறு ப‌ணிக‌ள் குறித்து விவ‌ரித்தார்.

இப்போட்டிக‌ளை ஒருங்கிணைத்த‌ ந‌ல‌த்துறை அலுவ‌ல‌ர் ராஜெந்திர‌ன், ஈடிஏ மெல்கோ எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் எம்.ஏ. ச‌யீத், இய‌க்குந‌ர் ஏ.எஸ்.ஏ. ப‌ஷீர், துணைப் பொது மேலாள‌ர் கே.எஸ்.ஏ. ப‌ஷீர் ஆகியோர் ஊழிய‌ர்க‌ளுக்காக‌ சிற‌ப்பான‌ முறையில் ஏற்பாடு செய்து கிரிக்கெட் போட்டியினை ந‌ட‌த்தினார்கள் என்று பாராட்டு தெரிவித்த‌ார்.

அஜீஸ் ந‌ன்றி கூறினார். பொறியாள‌ர் முஹைதீன் அப்துல் காத‌ர் நிக‌ழ்ச்சியினை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin