வியாழன், 10 டிசம்பர், 2009

காயல்பட்டினத்தில் அனிதாவுடன் அமைச்சர் மைதீன்கான் வாக்கு சேகரிப்பு


திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் இணைந்து அமைச்சர் மைதீன்கான் காயல்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

தைக்கா தெருவில் பிரசாரத்தை துவக்கிய அனிதா காட்டு தைக்கா தெரு, சிறு நயினார் தெரு, குத்துக்கல் தெரு, குறுக்கு தெரு, முகதும் தெரு, காஜியப்பா தைக்கா தெரு, ஆறாம்பள்ளி தெரு, அம்பலமறைக்கார் தெரு, புதுக்கடை தெரு, சித்தன் தெரு, கீழசித்தன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் காதர், மதுரை துணை மேயர் மன்னன், மதுரை மாவட்ட செயலாளர் தளபதி, முன்னாள் நகர செயலாளர் சொளுக்கு, நகர துணைச் செயலாளர் முகைதீன், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், நகர இளைஞரணி செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி :தூத்துக்குடி வெப்சைட்,திரு. கந்தன், திருச்செந்தூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin