வியாழன், 31 டிசம்பர், 2009

கபடி போட்டி, ஸ்ரீவை அணிக்கு 6வது பரிசு

எட்டயபுரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அம்பேத்கர் விளையாட்டு கழகம் சார்பில் மின்னொளி கபடி போட்டி நடந்தது.

இப்போட்டியில் விருதுநகர் தூத்துக்குடி மாவட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 34 அணிகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதில் ஸ்ரீவைகுண்டம் எஸ்.எம்.எஸ்.அணி 6வது இடத்தை பிடித்து ரூ.1001.00 பரிசை பெற்றது.

விழா ஏற்பாடுகளை எட்டயபுரம் அம்பேத்கர் விளையாட்டு கழகம் தலைவர் ஜெயபால், செயலாளர் சின்னப்பர், பொருளாளர் மோட்சம், ஆலோசகர் அலெக்சாண்டர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin