திங்கள், 2 நவம்பர், 2009

வங்கி எழுத்தர் பணி: பெண்களுக்கு இலவசப் பயிற்சி


பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர்கள் பணிக்கான தேர்வு குறித்த மூன்று நாள் இலவசப் பயிற்சி பெண்களுக்கு வியாழக்கிழமை (நவ. 5) முதல் தொடங்கவுள்ளது.

11 ஆயிரம் எழுத்தர் பணியிடங்கள் உள்ள இத்தேர்வு நவம்பர் 8 - ம் தேதி நடைபெறவுள்ளது.

"சக்ஸஸ் ஸ்கூல் ஆஃப் பாங்கிங்' என்ற நிறுவனம் இந்த இலவசப் பயிற்சியை நடத்துகிறது.

இதில் வேத கணித நுட்பங்கள் மூலம் கணிதக் கேள்விகளுக்கு துரித மற்றும் எளிதான தீர்வுகள், ஆங்கில இலக்கணம் உள்ளிட்டவை குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். சென்னை எழும்பூரில் உள்ள உலகப் பல்கலைக்கழக சேவை மையத்தில் பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் தேர்வு நுழைவுச் சீட்டு நகலுடன் வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: 92822 33333, 93848 44405

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin