வெள்ளி, 6 நவம்பர், 2009

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பொழியுது பருவமழை

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கொட்டிவரும் பருவமழையால் நெல்நாற்று நடவுப்பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது.

பருவமழையின் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருவதால் தாமிரபரணி ஆற்றில் விவசாயத்திற்கு தேவையானபடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது

ஆற்றுப்பாசனம், கால்வாய் பாசனம் மற்றும் குளத்துப்பாசன பகுதிகளில் நெல் நடவுபணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது. மணக்கரை, நடுவக்குறிச்சி, வல்லநாடு, வசவப்பபுரம், ஸ்ரீவைகுண்டம், பேரூர், சிவகளை, கால்வாய், பொன்னங்குறிச்சி, புதுக்குடி, வெள்ளூர், குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு செய்வதற்காக வயல்களை உழுது தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin