
கேன்சர் பற்றிய விழிப்புணர்ச்சி நடைப்பயண நிகழ்ச்சி "பிங்க் வால்க் அதோன் 2009" என்ற பெயரில் துபாயில் உள்ள பர்ஜுமான் ஷாப்பிங் மால் ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.00மணிக்கு பர்ஜீமான் ஷாப்பிங் மாலில் தொடங்கிய பயணம் 3.6 கிலோ மீட்டர் சுற்றி மீண்டும் பர்ஜீமான் மாலில் வந்து நிறைவுப் பெற்றது.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள், பெரியோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.
இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஏராளமான தமிழர்களும் கலந்துக் கொண்டனர்.

நடைப்பயணம் சென்ற வழியில் துபாய் போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்திருந்தனர். நடைப்பயண நிகழ்ச்சி முடிந்த பின்னர் பர்ஜூமான் ஷாப்பிங் மாலில் மீண்டும் ஒன்று சேர்ந்த மக்களுக்காக நேரடி இசை நிகழ்ச்சி, பிங்க் ஷாப்பிங், சிறுவர்களுக்கான பெயிட்டிங் போட்டி, பெண்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை பர்ஜீமான் ஷாப்பிங் மால் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக