வெள்ளி, 6 நவம்பர், 2009

கனமழை தூத்துக்குடி மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தற்போது குமரிக் கடலில் நிலை கொண்டுள்ள இதன் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இதேபோல த‌மிழக‌ம் முழுவது‌ம் பெ‌ய்து வரு‌ம் கனமழை‌க்கு செ‌ன்னை, கா‌‌ஞ்‌சிபுர‌ம், திருவ‌ள்ளூ‌ர், புது‌க்கோ‌ட்டை, திரு‌ச்‌சி, திருநெ‌ல்வே‌லி, ராமநாதபுர‌ம் உ‌ள்‌ளி‌ட்ட மாவ‌ட்‌ட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு இ‌ன்று ‌விடுமுறை அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது

நன்றி : செல்வா, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin