வியாழன், 19 நவம்பர், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் கிராம கல்விக்குழு பயிற்சி

ஸ்ரீவைகுண்டத்தில் கிராம கல்வி குழு பயிற்சி நடந்தது.அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் ஏ. கே.வி.எஸ்.மகளிர் மேல்நிலைப்பள்ளி தொகுப்பு வளமையம் சார்பில் 13 பள்ளிகளுக்கான பயிற்சி முகாமில் ஸ்ரீவை., டவுன் பஞ்.,தலைவர் கந்தசிவசுப்பு தலைமை வகித்தார்.

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆதிலட்சுமி, மாவட்ட திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் பள்ளிகளில் இயங்கும் கிராம கல்வி குழு செயல்பாடுகள், பெற்றோர்களின் கடமைகள், இடைநிற்றலை தவிர்த்தல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஆகியவற்றை பற்றி பேசினர். விழாவில் கவுன்சிலர் பாமா, பெற்றோர்கள் கிராம கல்வி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியை ஒருங்கிணைப்பாளர் வீரமூர்த்தி பயிற்றுனர் லொரேட்டா ஆகியோர் நடத்தினர்.

செய்தி தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin