செவ்வாய், 10 நவம்பர், 2009

ஜித்தாவில் நாளை மாபெரும் உணவு திருவிழா

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் நாளை (11.09.2009) மகளிர் உலகம் நடத்தும் இந்திய மகளிருக்கான "உணவு திருவிழா" நடக்க இருக்கிறது.

மகளிர் உலகம் என்னும் அமைப்பு, ஜித்தா சவுதி அரேபியாவில் பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வரிசையில் நாளை மாபெரும் 'உணவுத்
திருவிழாவுக்கு ஜித்தா 'சென்னை தர்பார்' உணவகத்தில் மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இலவசம், குறைந்த இருக்கைகளே உள்ள காரணத்தினால் போட்டியில் கலந்து கொள்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் புதுமையாகவும், சுவையாகவும் செய்யும் உணவுக்கு முதல் மூன்று பரிசுகள் காத்திருக்கின்றன. கலந்து கொள்பவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் உண்டு.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருமதி. தில்சாத் அக்பர் பாட்சா, திருமதி. மும்தாஜ் சீனி அலி மற்றும் திருமதி. நஜ்மா ஜின்னா ஆகியோர் செய்து வருகின்றனர்.

முன்பதிவுகளுக்கு 0509206690, 0507666906, 0560451020 ஆகிய கைப்பேசிகளை தொடர்பு கொள்ளலாம்.

ஈமெயில்: wworldjed@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin