வியாழன், 29 அக்டோபர், 2009

ஸ்ரீவையில் "ஸ்ரீவைகுண்டம் பாசன சங்க" நிர்வாகிகள் தேர்வு

தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வடகால், மருதூர் அணைக்கட்டு கீழக்கால் பாசன விவசாய சங்க நிர்வாகிகள் தேர்தல் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடகால் சங்கத் தலைவராக உதயசூரியன், உறுப்பினர்களாக தர்மராஜ், நடராஜன், குமாரசாமி, சுந்திரபாண்டி, ஜெயகோவிந்தன் உள்ளிட்டோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மருதூர் அணைக்கட்டு கீழக்கால் பாசன சங்கத் தலைவர் பதவிக்கு வைகுண்டம், சீனிபாண்டி ஆகியோர் போட்டியிட்டனர். 12 பேர் வாக்களித்தனர். இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றதால் திருவுளச்சீட்டு மூலம் சீனிபாண்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin