திங்கள், 12 அக்டோபர், 2009

சவுதி அரேபியாவில் அந்தரங்க விஷயங்களை பொது இடத்தில் பேசியவருக்கு ஐந்தாண்டு சிறை


சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர், செக்ஸ் பற்றி "டிவி' யில் பேசியதற்காக ஐந்தாண்டு சிறையும், ஆயிரம் கசையடியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய ஏர் - லைன்சில் பணிபுரிபவர் அப்துல் ஜாவீத். லெபனான் நாட்டு "டிவி' சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், இவர் தன்னுடைய செக்ஸ் அனுபவங்களை விளக்கினார்.

இவரது பேட்டி பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி "டிவி'யில் ஒளிபரப் பானது. இவரது அந்தரங்க விஷயங்களை பொது இடத்தில் பேசியதற்காக, 200க்கும் அதிக மான நேயர்கள், ஜாவீத் மீது புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில் ஜாவீத் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.இந்த வழக்கை விசாரித்த சவுதி கோர்ட், ஜாவீத்துக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், ஆயிரம் கசையடிகளையும் தண்டனையாக அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, இவர் ஐந்தாண்டுகளுக்கு "டிவி' சேனல்களில் பேசக்கூடாது, எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தண்டனையால் அதிர்ச்சியடைந்துள்ள ஜாவீத், தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin