செவ்வாய், 20 அக்டோபர், 2009

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் அக்டோபர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இம் மாதம் 23-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் (பொறுப்பு) துரை. ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இவ்வாண்டு கந்த சஷ்டி விழா இம் மாதம் 18-ம் தேதி தொடங்குகிறது.

6-ம் நாளான 23-ம் தேதி அன்று முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறும்.

எனவே, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து

அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து இதன் மூலம் ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படும்.

இது செலாவணி முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைப் பதிலாக நவ. 14-ம் தேதி 2-வது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றார் ஆட்சியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin