வியாழன், 17 செப்டம்பர், 2009

யூசுபியா இல்லத்தில் இப்தார் நிகழ்ச்சி

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள யூசுபியா அனாதை இல்லத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு அனாதை இல்லத் தலைவர் எம். அகமதுகான் தலைமை வகித்தார்.

நல்லாசிரியர் விருதுபெற்ற கல்லணை மகளிர் பள்ளித் தலைமை ஆசிரியர் நடராஜன், சங்கர் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் ஹமீதா பீவி ஆகியோர் நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.

முனைவர்கள் கண்ணபிரான், திருமலைக்குமாரசாமி, சண்முகவேல், பள்ளித் தலைவர் கோதர் மைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருளர் அப்துல் வஹாப், மாவட்ட துணைச் செயலர் எம். முகம்மது அலி, தென்மண்டல அமைப்புச்

செயலர் எஸ். மில்லத் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, யூசுபியா மக்கள் தொடர்பு அலுவலர் உஸ்மான் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் சேர்மக்கனி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin