வியாழன், 17 செப்டம்பர், 2009

ரமலான்: ஏழைகளுக்கு இலவச அரிசி அளிப்பு

திருநெல்வேலி, செப். 17: புனித ரமலான் பண்டிகையையொட்டி, மேலப்பாளையத்தில் ஏழைகளுக்கு இலவச அரிசி வேஷ்டி, சேலைகளை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் வழங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.டி. சும்சுல் ஆலம், முஸ்லிம் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் எம்.ஏ.எஸ். முகம்மது அபுபக்கர், மேலப்பாளையம் மண்டலத் தலைவர் எஸ்.எஸ். முகமதுமைதீன், தென்னிந்திய இஷா அப்துல் இஸ்லாம் சபை இணைச் செயலர் எல்.கே.எஸ். முகம்மது மீரான், மாமன்ற உறுப்பினர்கள் கே.எஸ். ரகுமத் பீவி, சைபுன்னிசா பேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பைத்துல்- மால் செயலர் எஸ்.எம். அப்துல் கபூர் வரவேற்றார். பொருளாளர் பி.எம். காஜா நஜீமுதீன் நன்றி கூறினார்.

மேலப்பாளையம் பைத்துல்- மால் இஸ்லாமிய தன்னார்வ தொண்டு நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin