திங்கள், 14 செப்டம்பர், 2009

எந்தப் பகுதிக்கு பணம் அனுப்பினாலும் உடனடியாக சேரும்:அஞ்சல் துறை சேவையில் மற்றொரு புதுமை


சென்னை: ""அஞ்சல் துறையில் உடனடி பண பரிமாற்றம் செய்வதற்காக "யூரோ-ஜீரோ' திட்டத்தை வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளோம். அத்திட்டத்தின் படி, உலகின் எந்த பகுதிக்கு பணம் அனுப்பினாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர்' மூலம் பணம் பெற்று கொள்ளலாம்,'' என்று அஞ்சல் துறையின் சரக்கு விமான சேவையை துவக்கிவைத்த மத்திய அமைச்சர் ராஜா பேசினார்.

அஞ்சல்துறையின் சரக்கு விமான சேவை துவக்க விழா சென்னை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவில், அஞ்சல் சேவை கழகத்தின் செயலாக்க உறுப்பினர் மஞ்சுளா பிரசர் வரவேற்றார்.அஞ்சல் துறையின் சரக்கு விமான சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து, சிறப்பு உறையை வெளியிட்ட மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:இந்தியாவில் மரபும், சேவையும் மாறாமல் இருப்பது ரயில்வே மற்றும் அஞ்சல் துறை.

ரயில்வே துறையாவது இந்தியாவில் சில இடங்களுக்கு சென்றடையவில்லை. ஆனால், ஆறு லட்சம் கிராமங்களை 1.55 லட்சம் தபால் நிலையங்கள் இணைத்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் அஞ்சல் துறை புதிய பொலிவு பெற்றுள்ளது. இந்த துறை தபால்களை மட்டும் கொண்டு சேர்க்கும் துறை அல்ல. பெற்றோருக்கும் பிள்ளைக்கும் உள்ள பாசத்தை, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள நம்பிக்கையை கொண்டு போய் சேர்க்கும் துறை.

அஞ்சல் துறை நவீனப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் சிதைந்து போகும் சூழல் ஏற்படும். இது சேவை துறை. இதில், லாபம் எதிர் பார்க்க கூடாது. வருவாயை கூட்டும் முயற்சி மேற்கொள் ளப்படாமல் இல்லை. வருவாயுடன் பொதுமக்கள் சேவை நோக்கத்தோடு இத்துறை செயல்பட வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin