செவ்வாய், 15 செப்டம்பர், 2009

நெல்லை பூம்புகாரில் "கொலு பொம்மை' கண்காட்சி தொடக்கம்


திருநெல்வேலி பூம்புகார் விற்பனை நிலையத்தில் திங்கள்கிழமை தொடங்கிய கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன் திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் விலை ரூ. 10 முதல் ரூ. 25,000 வரை உள்ளன.

இந்த கண்காட்சி இம் மாதம் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.

இந்த கண்காட்சியில் கொலு பொம்மைகளை வாங்குவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இந்த கண்காட்சி மூலம் ரூ. 2.5 லட்சத்திற்கு கொலு பொம்மைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் எஸ். அன்னலட்சுமி கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin