புதன், 9 செப்டம்பர், 2009

மலேசியா : கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 6 இஸ்லாமியர்கள் கைது

மலேசியாவில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மாரியம்மன் கோவிலை தங்கள் பகுதிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 இஸ்லாமியர்கள் மீது பிரிவினைவாத குற்றச்சாற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் 19 ஆவது வட்டப்பகுதியில் இருந்த பழம்பெருமை வாய்ந்த மகாமாரியம்மன் கோவிலை, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 23 ஆவது வட்டப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது.

இதற்கு அப்பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் அரசு செயலக கட்டடத்திலிருந்து சிறிது தொலைவிலுள்ள மசூதி ஒன்றிலிருந்து அரசு செயலக கட்டடம் நோக்கி பேரணியாக சென்று, அதன் வாயில் முன்புறம் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் கோவில் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது,இந்து மத உணர்வை புண்படுத்தியதற்காக மலேசிய தண்டனைச் சட்டம் 298 ஆவது பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் எச்சரித்திருந்தார்.

அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 6 இஸ்லாமியர்கள் மீது இந்தும்த உணர்வை புண்படுத்துவதற்காக சட்ட விரோதமாக கூடியது மற்றும் பிரிவினைவாத குற்றச்சாற்று சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி,இவர்கள் 6 பேரும் தலா 4,000 ரிங்கிட் செலுத்தினல் ஜாமீனில் விடுவிப்பதாக அறிவித்தார்.அதன்படி அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.

இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை,வருகிற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin