புதன், 22 ஜூலை, 2009

சிறு, நடுத்தர தொழில்துறையினருக்கு ஆன்லைன் சேவை: மைக்ரோசாஃப்ட் அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வணிகத் துறைக்குத் தேவையான ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.
இப்புதிய வசதியைப் பயன்படுத்தி சிறிய, நடுத்தர தொழில் துறையினர், செலவுகளைக் குறைத்து லாபம் ஈட்ட வழி ஏற்பட்டுள்ளது.

இந்த சேவையை இரண்டு மாதங்களுக்கு, சோதனை அடிப்படையில் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் இந்நிறுவனம் அனுமதித்துள்ளது.

இந்த சேவை மூலம் மின்னஞ்சல், மின்வழி ஒருங்கிணைப்பு, ஒருங்கிணைப்பு, மின்வழிச் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல், உற்பத்தி திறன் பெருக்கம் ஆகிய வசதிகளை பெறலாம்.

இந்நிறுவனம் அக்டோபர் மாதத்தில், இதை வணிக ரீதியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆன்லைன் மூலமான பல்வேறு சேவைகளை அளிக்கிறது. இடையூறு இன்றி இத்தகைய சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறுவதோடு பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப கட்டணத்தைச் செலுத்தும் வசதியையும் அளிக்கிறது.

நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள், விற்பனை முகவர்கள், விற்பனை குழுக்கள் ஆகியோருடன் 24 மணி நேரமும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பு கொள்ள இத்தகைய இணைய வழி சேவைகள் பயன்படுகின்றன.

இதன் மூலம் நிறுவனச் செலவுகள் குறைவதோடு உற்பத்தி மற்றும் விற்பனைத் திறன் அதிகரிக்கிறது. விரைவான தகவல் பரிமாற்றத்துக்கும் வழிவகுக்கிறது.

ஏற்கெனவே இந்நிறுவனம் அளித்த பல்வேறு சேவைகள் வணிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக இத்தகைய சேவையை அளிக்க முன்வந்துள்ளதாக நிறுவனத்தின் வணிகப் பிரிவு இயக்குநர் சஞ்சய் மன்சந்தா தெரிவித்துள்ளார்.

இந்த வசதியைப் பெற விரும்புவோர், மைக்ரோசாப்ட் டாட் காம் என்ற இணைய தளம் மூலம் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin