வெள்ளி, 24 ஜூலை, 2009

4000 போலி நோக்கியா போன்கள் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டன.


ஹாங்காங்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான 4000 நோக்கியா போலி மொபைல் போன்கள் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டன.

விமான நிலைய சரக்குப் பிரிவில் இந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த போன்கள் அனைத்தும் உண்மையில் சீனத் தயாரிப்பு மொபைல் போன்கள் ஆகும். ஆனால் நோக்கியா என்ற பெயரை ஒட்டி இவற்றை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்துள்ளனர்.

டெல்லியில் உள்ள ஒரு முகவரிக்கு இந்த போன்கள் அனுப்பபட்டுள்ளன. மொத்தம் 4000 போன்களும், அவற்றுக்கான சில உதிரி பாகங்களும் பார்சலில் இருந்தன.

இந்தப் போன்களைப் பார்த்தால் அசல் நோக்கியா போன் போலவே உள்ளது. சாதாரண மக்களுக்கு இது போலி போன் என்று தெரியாத அளவுக்கு கச்சிதமாக இதை மாற்றியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போன்கள் சீனாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சீன நிறுவனங்களின் சதியின் ஒரு பகுதியே இது என்று சுங்கத்துறையினர் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin