செவ்வாய், 23 ஜூன், 2009

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நடிகர்கள்: நெல்லையில் பரபரப்பு


திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை மேடை நடன நிகழ்ச்சி நடத்தும் நடிகர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு, மேடை நாடக நடிகர் மன்ற பொறுப்பாளர் சி.சுப்பிரமணியன் தலைமையில் பிரபல அரசியல் தலைவர்கள், நடிகர்கள் போன்று வேடமணிந்து வந்திருந்த கலைஞர்கள் ஆட்சியர் மு. ஜெயராமனிடம் அளித்த மனு அளித்தனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மேடை நடனக் கலைஞர்கள் உள்ளனர். சுமார் 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இத் தொழிலை நம்பி இருக்கிறோம். இதில், படித்த இளைஞர்கள், உடல் ஊனமுற்றோர் என அனைத்துத் தரப்பினரும் ஈடுபட்டுள்ளோம். இந்தக் கலைஞர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத் துறையில் உறுப்பினராக இருக்கிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மேடை நடன நிகழ்ச்சிகளை நடத்த காவல்துறை அனுமதி அளிப்பதில்லை. இதனால், எங்கள் தொழில் பாதிக்கப்பட்டு குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றன. எங்கள் குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மனு அளிக்க வந்திருந்தவர்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி, விஜயகாந்த், ரஜினிகாந்த், விஜய், வடிவேலு போன்று வேடமணிந்து வந்திருந்த கலைஞர்களை ஆட்சியர் அலுவலக ஊழியர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

தகவல் : செல்வா, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin