புதன், 24 ஜூன், 2009

செந்தூர் ரயிலை தினசரி இயக்க கோரிக்கை

திருச்செந்தூர்-சென்னை செந்தூர் விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் எம். சொக்கலிங்கம், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பிய தந்தி:

திருச்செந்தூருக்கும், சென்னைக்கும் இடையே தற்போது வாரத்தில் ஒருநாள் மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் செந்தூர் விரைவு ரயில் வாரத்தில் 5 நாள் இயக்கப்படும் என முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்திருந்தார்.

மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்ததால் உடனடியாக ரயில்வே அமைச்சரின் ஆணை செயல்படுத்தப்படவில்லை. மக்களவைத் தேர்தல் முடிவடைந்து புதிய ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிலையில் முன்னாள் அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்துவதற்குப் பதில் ரயில்வே நிர்வாகம் செந்தூர் விரைவு ரயிலை வாரத்தில் 2 நாள்கள் மட்டும் இயக்க இருப்பதாகத் தெரிகிறது. அது சரியல்ல. அதனால், ரயில் பயணிகள் மிகவும் கஷ்டப்படுவதுடன் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எனவே, செந்தூர் விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin