திங்கள், 29 ஜூன், 2009

குற்றாலத்தில் பெண்களுக்கு சிறப்பு வசதி: கருப்பசாமி பாண்டியன்


குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்ட துவங்கி விட்டது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் சந்தோசமடைந்துள்ளனர். குற்றாலத்தில் பெண்களுக்கு சிறப்பு வசதி ஏற்படுத்த தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் ஆய்வு செய்தார்.

இம்மாத துவக்கத்தில் சீசன் துவங்கினாலும் தொடர்ந்து வெயில் அடித்ததால் சீசன் டல்லடித்தது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் குற்றாலத்தில் சாரல் மழை பெய்தது. அதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இன்று காலையில் குற்றாலத்தில் பேரருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலத்தில் தண்ணீர் குறைவாகவே விழுகிறது.
நேற்றும் இன்றும் விடுமுறை நாளாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இன்று காலையில் லேசான வெயில் அடித்தது. சாரல் இல்லாவிட்டாலும், இதமான தென்றல் குற்றாலம் சுற்றுபுறத்தில் வீசியது. சுற்றலுலாப் பயணிகள் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

இதனிடையே தென்காசி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் இன்று காலை குற்றாலம் அருவி பகுதிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம், பெண்கள் குளிக்கும் இடத்திற்கு அருகே தற்காலிக உடை மாற்று அறை அமைக்க உத்தரவிட்டார்.

அலெக்ஸ், தென்காசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin