திங்கள், 29 ஜூன், 2009

நெல்லை மருத்துவக் கல்லூரி கலைவிழா இன்பினிட்டி- 2009 : மதுரை சாம்பியன் கல்லூரி


திருநெல்வேலியில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கான "இன்பினிட்டி- 2009' கலை விழா போட்டிகளில் மதுரை மருத்துவக் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 26ஆம் தேதி துவங்கிய "இன்பினிட்டி-2009' கலை விழாவில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 15 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து சுமார் 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் சிற்பம் செதுக்குதல், ரங்கோலி, போஸ்டர் டிசைன் வரைதல், ஆங்கில கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி என 30 வகையானப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, மதுரை மருத்துவக் கல்லூரி வென்றது. இரண்டாவது பரிசை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி தட்டிச் சென்றது.

நேற்று நடைபெற்ற நிறைவு விழாவிற்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கே. கனகராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே. மீர் முஸ்தபா உசேன், வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் என். பழனியப்பன், உறைவிட மருத்துவர் மோகன், பேராசிரியர்கள் முகமதுதம்பி, நம்பியப்பன், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செல்வா, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin