சனி, 27 ஜூன், 2009

நீண்டகால வசிப்பிட அனுமதி: துபாய் இந்தியர்கள்

மூதலீடு செய்துள்ள இந்தியர்கள், நீண்ட கால வசிப்பிட அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய அரபு குடியரசுகளில் ஒன்றான துபாயில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கோடிக்கனக்கான தினாரை முதலீடு செய்துள்ளனர். அதன் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகளவு பங்களிப்பு வழங்கியுள்ளனர். அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் நீண்ட கால வசிப்பிட அனுமதியை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

துபாயில் நீண்ட காலமாக தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்தியர்களின் அமைப்பான இந்தியன் பிசினஸ் அண்ட் புரபஷனல் கவுன்சிலைச் [The Indian Business and Professional Council (IBPC)] சேர்ந்த பிரதிநிதிகள், புதன்கிழமையன்று துபாய் குடியுரிமை மற்றும் வசிப்பிட உரிமை துறையின் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் அகமது அல் மர்ரியை சந்தித்து விவாதித்தனர்.

அப்போது இந்தியன் பிசினஸ் அண்ட் புரபஷனல் கவுன்சில் தலைவர் பராஸ் சகாத்புரி பேசுகையில், ஐக்கிய அரபு குடியரசில் உள்ள இந்திய வர்த்தகர்கள் மிக நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் மூன்று வருட வசிப்பிட அனுமதியால், அவர்கள் மத்தியில் நிலையில்லா தன்மை ஏற்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர்கள், நிபுணர்கள் கோடிக்கான தினாரை முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக துபாய், ஜிபில் அலி, சார்ஜா ஆகிய இடங்களில் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். எங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், நீங்கள் ஏன் நீண்ட கால வசிப்பிட அனுமதி கொடுக்க கூடாது? சுற்றுலா பயணிகள், பொருட்களை வாங்க வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, விசாவுக்கான டிபாசிட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு துபாய் குடியுரிமை மற்றும் வசிப்பிட உரிமை துறையின் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் அகமது அல் மர்ரி பதிலளிக்கையில், எனது துறை முடிந்த உதவிகளை செய்யும். உங்கள் கோரிக்கையில் பெரும்பாலவை, எனது துறையின் அதிகார வரம்பில் இல்லை. இதற்கு பெடரல் (மத்திய) அரசு தான் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்தியர்கள் முன்னதாகவே விசா எடுக்காமல், துபாயில் வந்து இறங்கிய உடன் விசா வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்படுமா என்று கேட்டதற்கு, இது நல்ல யோசனை. இதை பற்றி மேலும் விவாதிக்க வேண்டும் என்று பதிலளித்தார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்திய கான்சல் ஜெனரல் வேனு ராஜமோனி, சிங்கப்பூர் கான்சல் ஜெனரல் தில்லிப் நாயர், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin