ஞாயிறு, 21 ஜூன், 2009

சுந்தரனார் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை 10 நாள்கள் நீட்டிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சில பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் கா.அ. மணிக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், கடல்வாழ் உயிர்த் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பவியல், வணிகவியல், உடற்கல்வியியல் நீங்கலாக பிற அனைத்து முதுகலை மற்றும் இளமுனைவர் (எம்பில்) பாடப் பிரிவுகளில் சேர விண்ணப்பங்களைப் பெறவும், விண்ணப்பிக்கவும் கடைசிநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியான 10 தினங்கள் வரை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அனுப்பலாம். மேலும்

விவரங்களை பல்கலைக்கழக இணையதள முகவரியான ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ர்ழ்ஞ்.ண்ய் -ல் அறிந்து கொள்ளலாம் என்றார் மணிக்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin