ஞாயிறு, 24 மே, 2009

நாகர்கோவில் திருக்குர்ஆன் மாநாடு

நாகர்கோவில் அருகேயுள்ள பறக்கை ஐஎஸ்இடி நகரில் திருக்குர்ஆன் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெறுகிறது.


இதுகுறித்து ஜம்யியது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (ஜே.ஏ.கியூ.எச்) மாநில தலைவர் எஸ். கமாலுத்தீன்மதனி, கோவை எஸ். அய்யூப் உள்ளிட்டோர் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மனித சமுதாயம் தன்னைப் படைத்த இறைவனைப் பற்றி அறிந்து மனிதர்கள் எல்லோரும் ஒரே இறைவனுடைய படைப்புகள், எல்லோரும் ஒருதாய் மக்கள், பிறப்பால் மனிதர்களிடையே பாகுபாடு கிடையாது, எல்லோரும் படைத்த இறைவனித்திலேயே போய் சேரவிருக்கிறோம் என்ற உண்மையை மனித சமுதாயத்துக்கு திருக்குர்ஆன் அறிவுறுத்துகிறது.
இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக இம் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை இம் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பங்குபெற்று சிறப்புரையாற்ற இலங்கையிலிருந்து இஸ்மாயில் ஸலபி, கேரளத்திலிருந்து அப்துஸ்ஸலாம் மோங்கம், சென்னையிலிருந்து முப்தி உமர் ஷரீப், மதுரையிலிருந்து ரஹ்மதுல்லாஹ் பிர்தவ்ஸி உள்ளிட்ட பல அறிஞர்கள் வருகிறார்கள்.

மாநாட்டுக்கு ஓய்வுபெற்ற காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஏ. மலுக்குமுதலி தலைமை வகிக்கிறார். மாநாட்டின்போது புதிய புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன. சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin