வெள்ளி, 29 மே, 2009

பி.எஸ்.என்.எல். புதிய சலுகை: எஸ்.டி.டி. 25 பைசா; உள்ளூர் அழைப்பு 10 பைசா; மத்திய மந்திரி ராசா அறிவிப்பு

மத்திய மந்திரிசபையில் தகவல் தொழில்நுட்ப மந்திரியாக ஆ. ராசா நேற்று பதவி ஏற்றார். பதவியேற்ற பின் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடரும். தொலைபேசி கட்டணத்தை குறைக்க உரிய வழிகள் காணப்படும். சீரிய நிர்வாகத்தின் காரணமாக உள்ளூர் அழைப்பு நிமிடத்துக்கு 10 பைசாவாகவும், எஸ்.டி.டி. அழைப்பு 25 பைசாவாகவும் குறையும்.

3ஜி அலைக்கற்றை ஏலம், வயர்லெஸ், விமாகஸ் அகண்ட அலைவரிசை, அரசு அலுவலகங்களில் கீழ்நிலை வரை கம்ப்யூட்டர் மயமாக்கல் ஆகியவற்றுக்கு எமது துறை முக்கியத்துவம் தரும். தபால் துறை சர்வதேச தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin