தூத்துக்குடியில் உள்ள தனியார் பூ நிறுவனத்தில் ஏரல், சிவகளை, பெருங்குளம் பகுதியை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை நிறுவன பஸ்களில் அழைத்து செல்வது வழக்கம். வழக்கம்போல் காலை 7.30 மணிக்கு சிவகிளையில் பெண்களை ஏற்றிக் கொண்ட பஸ் பெருங்குளம் குளத்தின் கரை வழியாக சென்றது.
அதிகாலையில் பனி மூட்டமாக இருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு பஸ் குளத்தின் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது.
பணி மூட்டம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது இந்த பஸ் மோதியது. இதில் நான்கு பெண்கள் காயமடைத்தனர். அவர்கள் நெல்லை, ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக