ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

உலக கோப்பை கிரிகெட் 2011 இணையத்தில் நேரடியாக காண


2011 உலக கோப்பை கிரிகெட்டை இணையத்தளத்தில் நேரடியாக கண்டு களிக்க கீழ் காணும் சுட்டியை சொடுக்கவும்.

 

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை


10வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் வரும் 19ம் தேதி தொடங்குகின்றன.

இந்த மூன்று நாடுகளிலும் நடக்கும் போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கின்றன.

அதன் விவரம்:

பிப் 19 வங்கதேசம் Vs இந்தியா பி மிர்பூர் (வங்கதேசம்) பகல் 2 மணி

பிப் 20 கென்யா Vs நியூசிலாந்து ஏ சென்னை காலை 9.30 மணி

பிப் 20 இலங்கை Vs கனடா ஏ ஹம்பன்டோட்டா (இலங்கை) பகல் 2.30 மணி

பிப் 21 ஆஸ்திரேலியா Vs ஜிம்பாப்வே ஏ அகமதாபாத் பகல் 2.30 மணி

பிப் 22 இங்கிலாந்து Vs நெதர்லாந்து பி நாக்பூர் பகல் 2.30 மணி

பிப் 23 கென்யா Vs பாகிஸ்தான் ஏ ஹம்பன்டோட்டா பகல் 2.30 மணி

பிப் 24 தென் ஆப்பிரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் பி டெல்லி பகல் 2.30 மணி

பிப் 25 ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்து ஏ நாக்பூர் காலை 9.30 மணி

பிப் 25 வங்கதேசம் Vs அயர்லாந்து பி மிர்பூர் பகல் 2 மணி

பிப் 26 இலங்கை Vs பாகிஸ்தான் ஏ கொழும்பு பகல் 2.30 மணி

பிப் 27 இந்தியா Vs இங்கிலாந்து பி பெங்களூர் பிறபகல் 2.30 மணி

பிப் 28 கனடா Vs ஜிம்பாப்வே ஏ நாக்பூர் காலை 9.30 மணி

பிப் 28 நெதர்லாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் பி டெல்லி பகல் 2.30 மணி

மார்ச் 1 இலங்கை Vs கென்யா ஏ கொழும்பு பகல் 2.30 மணி

மார்ச் 2 இங்கிலாந்து Vs அயர்லாந்து பி பெங்களூர் பகல் 2.30 மணி

மார்ச் 3 நெதர்லாந்து Vs தென் ஆப்பிரிக்கா பி மொகாலி பகல் 2.30 மணி

மார்ச் 3 கனடா Vs பாகிஸ்தான் ஏ கொழும்பு பகல் 2.30 மணி

மார்ச் 4 நியூசிலாந்து Vs ஜிம்பாப்வே ஏ அகமதாபாத் காலை 9.30 மணி

மார்ச் 4 வங்கதேசம் Vs வெஸ்ட் இண்டீஸ் பி மிர்பூர் பகல் 2 மணி

மார்ச் 5 இலங்கை Vs ஆஸ்திரேலியா ஏ கொழும்பு பகல் 2.30 மணி

மார்ச் 6 இங்கிலாந்து Vs தென் ஆப்பிரிக்கா பி சென்னை காலை 9.30 மணி

மார்ச் 6 இந்தியா Vs அயர்லாந்து பி பெங்களூர் பகல் 2.30 மணி

மார்ச் 7 கனடா Vs கென்யா ஏ டெல்லி பகல் 2.30 மணி

மார்ச் 8 நியூசிலாந்து Vs பாகிஸ்தான் ஏ பல்லிகிலே (இலங்கை) பகல் 2.30 மணி

மார்ச் 9 இந்தியா Vs நெதர்லாந்து பி டெல்லி பகல் 2.30 மணி

மார்ச் 10 இலங்கை Vs ஜிம்பாப்வே ஏ பல்லிகிலே பகல் 2.30 மணி

மார்ச் 11 அயர்லாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் பி மொகாலி காலை 9.30 மணி

மார்ச் 11 வங்கதேசம் Vs இங்கிலாந்து பி சிட்டகாங் பகல் 2.30 மணி

மார்ச் 12 இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா பி நாக்பூர் பகல் 2.30 மணி

மார்ச் 13 கனடா Vs நியூசிலாந்து ஏ மும்பை காலை 9.30 மணி

மார்ச் 13 ஆஸ்திரேலியா Vs கென்யா ஏ பெங்களூர் பகல் 2.30 மணி

மார்ச் 14 வங்கதேசம் Vs நெதர்லாந்து பி சிட்டகாங் காலை 9 மணி

மார்ச் 14 பாகிஸ்தான் Vs ஜிம்பாப்வே ஏ பல்லிகிலே பகல் 2.30 மணி

மார்ச் 15 அயர்லாந்து Vs தென் ஆப்பிரிக்கா பி கொல்கத்தா பகல் 2.30 மணி

மார்ச் 16 ஆஸ்திரேலியா Vs கனடா ஏ பெங்களூர் பகல் 2.30 மணி

மார்ச் 17 இங்கிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் பி சென்னை பகல் 2.30 மணி

மார்ச் 18 அயர்லாந்து Vs நெதர்லாந்து பி கொல்கத்தா காலை 9.30 மணி

மார்ச் 18 நியூசிலாந்து Vs இலங்கை ஏ மும்பை பகல் 2.30 மணி

மார்ச் 19 வங்கதேசம் Vs தென் ஆப்பிரிக்கா பி மிர்பூர் காலை 9 மணி

மார்ச் 19 ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் ஏ கொழும்பு பகல் 2.30 மணி

மார்ச் 20 கென்யா Vs ஜிம்பாப்வே ஏ கொல்கத்தா காலை 9.30 மணி

மார்ச் 20 இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் பி சென்னை பகல் 2.30 மணி

கால் இறுதிப் போட்டிகள்:

1. மார்ச் 23: முதல் கால் இறுதிப் போட்டி (ஏ1 Vs பி4)- மிர்பூர்- பகல் 2 மணி

2. மார்ச் 24: 2வது கால் இறுதி போட்டி (ஏ2 Vs பி3)- அகமதாபாத்- பகல் 2.30 மணி

3. மார்ச் 25: 3வது கால் இறுதி போட்டி (ஏ3 Vs பி2)- மிர்பூர்- பகல் 2 மணி

4. மார்ச் 26 கால் இறுதி (ஏ4 பி1) கொழும்பு பகல் 2.30 மணி

அரையிறுதிப் போட்டிகள்:

1. மார்ச் 29: கொழும்பு- பகல் 2.30 மணி

2. மார்ச் 30: மொகாலி- பகல் 2.30 மணி

இறுதிப்போட்டி:

ஏப்ரல் 2-மும்பை- பகல் 2.30 மணி


2011ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ள நகரங்கள், மைதானங்களின் விவரம்:

இந்தியா - மும்பை, டெல்லி, சென்னை, நாக்பூர், மொஹாலி, அகமதாபாத், பெங்களூர் மற்றும் கொல்கத்தா.

இலங்கை - கொழும்பு, ஹம்பந்தோட்டா, கண்டி.

வங்கதேசம் - டாக்கா, சிட்டகாங்.

அணிகள் விவரம்:

மொத்தம் 14 அணிகள். இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

ஏ பிரிவு: ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா.

பி பிரிவு: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள், நெதர்லாந்து, அயர்லாந்து.

போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்:

இந்தியா

எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை

சர்தார் படேல் குஜராத் ஸ்டேடியம், மோத்தீரா, அகமதாபாத்

விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், நாக்பூர்

பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியம், டெல்லி

எம். சின்னச்சாமி ஸ்டேடியம், பெங்களூர்

பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், மொஹாலி

வாங்கடே ஸ்டேடியம், மும்பை

ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

வங்கதேசம்

ஷெர் பங்களா தேசிய ஸ்டேடியம், மிர்பூர், டாக்கா

ஷெர் அகமது செளத்ரி ஸ்டேடியம், சிட்டகாங்

இலங்கை

ஆர். பிரேமதாஸ ஸ்டேடியம், கொழும்பு

பலிகெல்லே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், கண்டி

மகிந்தா ராஜபக்சே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், ஹம்பந்தோட்டா

தகவல் : தட்ஸ்தமிழ்

ஸ்ரீவை, ஸ்ரீ.கே.ஜி.எஸ். கலைக் கல்லூரியில் கருத்தரங்கு

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ.கே.ஜி.எஸ். கலைக் கல்லூரியில் காந்திய சிந்தனை மையம் சார்பில் தேசிய கருத்தரங்கம் 2 நாள்கள் நடைபெற்றது.

தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார்.

சேலம் திருச்செங்கோடு காந்தி ஆசிரமச் செயலர் லட்சுமிகாந்தன்பாரதி, பேராசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், ஆண்டியப்பன், கோபாலகிருஷ்ணன், குழந்தைசாமி, காந்திய சிந்தனை துணைத் தலைவர் ஆண்டியப்பன், இயக்குநர் போஸ் உள்ளிட்டோர் பேசினர்.

நிறைவு நாளில் முன்னாள் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா,அண்ணாமலை, சுப்பையா உள்ளிட்டோர் பேசினர்.

கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். பேராசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார். பேராசிரியர் போஸ் நன்றி கூறினார்.

தகவல் : தினமணி

புதன், 9 பிப்ரவரி, 2011

நமது செல்போனில் வேண்டாத அழைப்புகளை தடுக்க பதிவு செய்யலாம்.

புதுடெல்லி : செல்போனில் தொல்லை அழைப்புகளுக்கு இன்னும் 20 நாட்கள்தான் காலம். அதன் பிறகு அவற்றை முற்றிலும் நிறுத்த நாளை முதல் பதிவு செய்யும் வசதியை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது. செல்போனில் விருப்பமற்ற அழைப்பை தவிர்க்க தேசிய அழைக்காதீர் பதிவேடு ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது. அதில் பதிவு செய்த பிறகும் தொல்லை அழைப்புகள் தொடர்வதாக டிராய்க்கு ஏராளமான புகார்கள் குவிந்தன. அழைக்காதீர் பதிவேடு, அழைக்கலாம் பதிவேடு என்று இரண்டு இருந்ததால் அதில் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. எனவே, எளிமையான புதிய வசதியை டிராய் இப்போது அறிவித்துள்ளது. அதன்படி விருப்பமற்ற அழைப்புகளை தடுக்க நாளை முதல் பதிவு செய்யலாம். இதற்கு 1909 என்ற எண்ணுக்கு அழைத்தோ அல்லது எஸ்எம்எஸ் அனுப்பியோ இதை செய்ய முடியும். பதிவு செய்யும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் தொல்லை அழைப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும். 1909 என்ற எண்ணில் அழைத்தால், விருப்பமற்ற அழைப்புகளை முற்றிலும் நிறுத்துவது அல்லது குறிப்பிட்ட துறைகளை சேர்ந்த அழைப்புகளை நிறுத்துவது தொடர்பாக விவரங்கள் தெரிவிக்கப்படும். அதன்படி, விருப்பத்தை தேர்வு செய்து பதிவு செய்யலாம். எஸ்எம்எஸ் செய்பவர்கள், முற்றிலும் தடை செய்ய ஷிஜிகிஸிஜி 0 என்று டைப் செய்து 1909க்கு அனுப்பலாம். குறிப்பிட்ட துறைகளின் அழைப்பு, எஸ்எம்எஸ்களை பெற விரும்புவோர் ‘0’க்கு பதிலாக அதற்குரிய எண்களை சேர்த்து அனுப்ப வேண்டும். உதாரணமாக, வங்கி, கிரெடிட் கார்டு, நிதி தொடர்பான அழைப்புகள் தேவை என்றால் ‘1’ என்றும், ரியல் எஸ்டேட் என்றால் ‘2’ என்றும் இரண்டும் தேவை என்றால் ஷிஜிகிஸிஜி 1,2 என்று எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். கல்வி &3, சுகாதாரம் &4, ஆட்டோமொபைல் &5, பொழுதுபோக்கு &6, சுற்றுலா &7 என விருப்பமான பிரிவுகளை தேர்வு செய்ய அதற்குரிய எண்களையும் பயன்படுத்தலாம். பதிவு செய்பவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் இந்த வசதி அமலுக்கு வரும் என்று டிராய் அறிவித்துள்ளது

செய்தி:  தினகரன்.

புதன், 2 பிப்ரவரி, 2011

பேட்மாநகரம் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்


காங்., எம்.பி., கல்குவாரியை மூடக்கோரி, பேட்மாநகரம் பகுதி பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.


ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பேட்மாநகரம் அருகே கல்குவாரிகள் உள்ளது. அங்கு வெடிக்கும் வெடி சத்தத்தால் பேட்மாநகரத்தில் உள்ள கட்டடங்கள், பள்ளிகள், மசூதிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல், சுவர்களில் கீறல்கள் விழுந்து, மிகப்பெரிய இழப்பு ஏற்படுத்தி வருகிறது. எனவே கல்குவாரிகளை தடை செய்யக்கோரி, பேட்மாநகரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த பேராட்டத்திற்கு பேட்மாநகரம் ஜமாத் தலைவர் பீர் முகமது, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மா.கம்யூ. செயலாளர் கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பெரம்பூர் தொகுதி மா.கம்யூ., எம்.எல்.ஏ., மகேந்திரன், மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் போராட்டத்தை வலியுறுத்தி பேசினர்.


உண்ணாவிரத போராட்டத்தில், பேட்மாநகரத்தில் பெரியோர்கள், குழந்தைகள் நிம்மதியாக தூங்கவும், இருதயம், கண் நோய் வராமல் பாதுகாக்கவும், விவசாயம் கால்நடைகள் வன விலங்குகளை பாதுகாத்திடவும், கல்குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில்பேட்மாநகரம் கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மா.கம்யூ.,எம்.எல்.ஏ.,மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக அமையும் இந்த கல்குவாரிகளை மூடக்கோரி கடந்த 2007 முதல் பேட்மாநகரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது அவர்களின் நான்காவது போராட்டமாகும்.


பேட்மாநகரம் பகுதியில் இருக்கும் கல்குவாரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்., எம்.பி., ஒருவருக்கு உரிமையானது. அதனால்தான் தமிழகத்தை ஆளும் தி.மு.க., கல்குவாரி பிரச்னையில் மெத்தனம் காட்டி வருகின்றனர், என்றார்.

தகவல் : தூத்துக்குடி வெப்சைடு

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

In India, Pizza Hut and Domino’s Pizza are NOT HALAL. Their PIZZA contains PORK (Flesh of PIG) and LARD (Fat of PIG)

போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா ஹராமா ?
(அபூ ரிஸ்வான்)



வளர்ந்து வரும் இந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் கலாச்சராத்துடன் இப்பொழுது அதிகமாக வெளிநாட்டு உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் முன்னிலையில் இருப்பது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) கலாச்சாரம்.


கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் வீட்டிற்குச் செல்ல நேரமாகிவிட்டாலும் அல்லது பார்ட்டி (Party) என்றாலும் ஆர்டர் பண்ணுவது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) ஆகத்தான் இருக்கும். அதிலும் முக்கியமாக பிஸ்ஸா (Pizza). பிஸ்ஸாவை நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது கிராமங்களில் உள்ளவர்கள் கூட இப்பொழுது டிவி விளம்பரங்கள் மூலம் தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்களுடைய ஓரே எண்ணம் ஒரு முறையாது இந்த பிஸ்ஸாவை ருசித்து விடவேண்டும் என்பதுதான்.


பிஸ்ஸாவை (Pizza) இந்தியாவில் PIZZA HUT DOMINO’S PIZZA என்ற இரண்டு கம்பெனிகள் விற்பனை செய்கின்றன. குறிப்பாக, பிஸ்ஸா பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் (Shopping Complex) ளில்தான் கிடைக்கும். பிஸ்ஸா (Pizza) வெவ்வேறு ருசிகளில் கிடைக்கி்ன்றது. எடுத்துக்காட்டாக சைவம், அசைவம் (ஆட்டுக்கறி, மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி).


கடந்த டிசம்பர் விடுமுறையில் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றிருந்தேன். புதிதாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் திறந்திருப்பதாகவும் எல்லாப் பொருட்களும் அங்கே கிடைப்பதாகவும் சொன்னார்கள். நாங்களும் அங்கே சென்றோம். ஒரு தளத்தில் PIZZA HUT கடையைப் பார்த்த என்னுடைய மகன்கள் “பிஸ்ஸா (Pizza) சாப்பிடலாம்“ என்று அடம் பிடித்தனர். நான், “இந்தியாவில் உள்ள PIZZA HUT ஹலாலா என்று தெரியாது. ஆகையால் போக வேண்டாம்“ என்று சொன்னேன்.


நிறைய முஸ்லிம் நபர்களை PIZZA HUT ல் பார்த்த என்னுடைய மகன்கள், “அங்கே பாருஙகள். முஸ்லிம் ஆட்கள் இருக்கிறார்கள்“ என்று சொன்னார்கள். “ஹலாலாக இருப்பதனால்தானே அவர்கள் சாப்பிடுகிறார்கள்“ என்று சொன்னார்கள். நானும் அரை மனதுடன் வெளிநாட்டில் உள்ள பிஸ்ஸாவிற்கும் இந்தியாவில் உள்ள பிஸ்ஸாவிற்கும் எப்படி சுவை வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று அங்கே சென்றேன்.


உணவுப் பட்டியலை (Menu Card) வாங்கி என்ன ஆர்டர் செய்யலாம் என்று பார்த்தேன். வெஜிடேரியன், ஃபியரி சிக்கன்... என்று பார்த்துக் கொண்டு வந்த எனக்கு PEPPERONI (100% Pork Pepperoni) என்று பார்த்தவுடன் தலை சுற்றியது.


உடனே வெளியே வந்து விட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்களைப் பார்த்து மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. Pork Pepperoni தவிர வேறு பிஸ்ஸாவை அவர்கள் சாப்பிடலாம் என்று எண்ணிக்கொண்டேன்.


இருந்தாலும் மனது கேட்கவில்லை. ஆகையால் அங்கே நின்றிருந்த சில முஸ்லிம் நபர்களிடம் “PIZZA HUT ஹலாலா?“ என்று கேட்டேன். சிறிது யோசித்து விட்டு “ஹலால்தான்“ என்றார்கள். “ஆனால் Pork Pepperoni என்று உணவுப் பட்டியலில் போட்டிருக்கிறதே...“ என்று இழுத்தேன். அதைப் பார்த்து விட்டு, “அதனால் ஒன்றுமில்லை“ என்று சொன்னார்கள்.


மற்ற சிலர், “நாங்கள் வெஜிடேரியனைத்தான் வாங்குகிறோம்“ என்று சொன்னார்கள். எனக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. நிறைய போ்களுக்கு PORK என்றால் பன்றியின் இறைச்சி என்றே தெரியவில்லை. நான் அவர்களிடம் “PORK என்றால் பன்றியின் இறைச்சி“ என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர்கள் நான் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று அரை மனதுடன் வெளியே வந்தார்கள்.


இதற்கு முஸ்லிம்களின் அறியாமைதான் காரணம்.

1. “இந்தியாவில் கிடைக்கும் இறைச்சி எல்லாம் நம்மாளுகதானே (முஸ்லிம்கள்) அறுக்கிறார்கள்“ என்று நினைப்பது. தற்பொழுது கிடைக்கும் வெளிநாட்டு உணவுப் பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. ஆகையால் ஹலாலாக இல்லாமல் இருக்கலாம்.

2. இந்தியாவில் பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுதில்லை. ஆகையால் எல்லா உணவுக் கடைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும் பன்றிக் கறி விற்க மாட்டார்கள் என்று நினைப்பது தவறு.

3. PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA போன்றவை வளைகுடா நாடுகளில் ஹலாலாக இருக்கலாம். ஆனால் அவை இந்தியாவிலும் ஹலாலாக இருக்கும் என்று எண்ணுவது தவறு.

4. LARD எனப்படும் பன்றியின் கொழுப்பை பிஸ்ஸா சுவையாக இருக்க CHEESE ல் பயன்படுத்துகின்றனர். LARDஐ எல்லா பிஸ்ஸாவுக்கும் பயன்படுத்தமாட்டார்கள் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. நாம் வெஜிடேரியன் பிஸ்ஸாவைத்தானே சாப்பிடுகிறோம் என்று நினைப்பது மிகத் தவறு. பிஸ்ஸாவைச் சுட வைக்க வெஜிடேரியனுக்கும் மற்ற பிஸ்ஸாவிற்க்கும் வெவ்வேறான தட்டுக்களை உபயோகப்படுத்துவதில்லை. PORK மற்றும் LARD மற்ற பிஸ்ஸாவில் கலப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்களுக்கு பிள்ளைகள், தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA ஹலால் இல்லை என்று எடுத்துச் சொல்லி மிகப் பெரிய தவறிலிருந்து தடுக்க அல்லாஹ் அருள் புரிவானாக. முஸ்லிம் சமூக அமைப்புகள் கூட மக்களிடம் இதனை எடுத்துச் சொல்லலாம்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு SMS மூலம்
“In India, Pizza Hut and Domino’s Pizza are NOT HALAL. Their PIZZA contains PORK (Flesh of PIG) and LARD (Fat of PIG) ” என்று தெரியப்படுத்துங்கள்.


இன்னும் சந்தேகமா? PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA பற்றி அவர்களின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

1. http://www.pizzahut.co.in/cheesybites_menu.php OR http://www.pizzahut.co.in/

2. http://www.dominos.co.in/nonvegpizzas.jsp and Click CHEESE AND PEPPERONI menu.


தகவல் : அதிரை போஸ்ட்

தமிழக (இந்திய) மீனவர்களின் தலையெழுத்தை மாற்ற ஒரு கையெழுத்து.

நாம் இணையத்தை பல வழிகளில் உபயோகபடுத்துகிறோம்,அதில் நாம் அணைவரும் சினிமா பார்க்கவும், சினிமா செய்திகள்,உலக நடப்புகள்  சமூக வலைப்பின்னல் தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் மாதிரியான தளங்களில் அரட்டை அடிக்கவும், வலைப்பதிவுல-கவிதை, கட்டுரை, அரசியல், அறிவியல் எழுத-படிக்கவும், வியாபாரங்கள் செய்யவும் உபயோக படுத்துகிறோம், அதே இணையத்தை பயனுள்ள புரட்சிகரமான வழியிலும் பயன்படுத்த முடியும்.
இதில் இப்பொழுது பெட்டிஷன் ஆன்லைன் அப்படீன்னு ஒரு இணையதளம் உள்ளது.இது இணைய வழி போராட்டங்கள், புரட்சிகளின் வழியாக பொதுமக்களின் பல கோரிக்கைகள் நிறைவேற அரசுக்கு உணர்த்தும் ஒரு தளம்.இதன் மூலம் நீங்கள் செய்யவேண்டியது என்னன்னா, கடிதத்தைபடிச்சிட்டு, Click here to sign the petition அப்படீங்கிற பொத்தானை அழுத்தி, அதுக்கப்புறம் தோன்றுகிற ஒரு சின்ன படிவத்துல, ஒரே ஒரு நிமிஷம் செலவு பண்ணி, நம்ம பேரு, மின்னஞ்சல் முகவரி, சில கருத்துகள் இப்படி மூனே மூனு விஷயங்களப் பூர்த்தி செஞ்சுட்டு, அதுக்கு கீழே இருக்குற இன்னொரு பொத்தானை திரும்பவும் அழுத்தினா போதும்!
கடிதத்தின் தமிழாக்கம் இதோ!
சமீப காலமாக தமிழக மீனவர்கள் இலங்கை சிங்கள கடற்படையினரால் தொடர்ந்து சுட்டு கொல்லப்பட்டும் துன்புறுத்தபட்டும் வருகிறார்கள்,மேலும் அவர்களுடைய படகுகளும் மீன்பிடி சாதனங்களும் சுறையாடபட்டும் வருகிறது. சமீபத்திய கணக்குகளின் படி 539 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இதில் பெரும்பங்கு நாகப்பட்டினத்தைசேர்ந்த மீனவச் சமுதாயத்தின் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பும் இலங்கை அரசுக்கு எதிரான எதிர்பலைகளை தமிழர்கள் மத்தியில்அதிகபடுத்தயுள்ளது.மேலும்,தமிழகக்கடலோரபகுதியில் வசிக்கும் ஒவ்வொரு
மீனவக்குடும்பங்களில் உயிர்பயமும் அதிகரித்துள்ளது.இதற்குமுன்பு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் ஏற்பட்ட இதுபோன்ற பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான ஒரு தீர்வைக் கண்டிருக்கும் இந்திய அரசை நாங்கள் நம்புகிறோம்.அதுபோலவே எங்கள் மீனவர்களின் உயிரிழப்புகளை நிறுத்த ஒரு நிரந்தரமான தீர்வை இந்திய அரசிடம் எதிர்பார்க்கிறோம்”

இந்தியாவிலும் இதர உலக நாடுகளிலும் வாழும் இந்தியர்களான நாங்கள் பின்வரும் எங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்:

இந்திய அரசுக்கு....


•இந்திய மீனவர்களை சிங்கள கடற்படை தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை எச்சரிக்கவேண்டும்

•தமிழக மீனவர்களின் உயிர் மற்றும் அவர்களது உடமைகள் ஆகியவற்றை பாதுகாக்க போதுமான கடற்படையை ரோந்தில் ஈடுபடுத்த வேண்டும்

•“தமிழக மீனவர்களின் தினசரி செயல்பாடுகளின் வாழ்வாதாரமாக இருக்கும்  கச்சத்தீவை இலங்கை இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்” என்று இலங்கை அரசிடம் கோர வேண்டும்

•ஒருவேளை, இரு அரசுகளும் கச்சத்தீவை ஒரு பொது உடமையாக கருதுமேயானால், IMLB விதிகளை தளர்த்தி, இரு நாட்டு மீனவர்களும் நிபந்தனை ஏதுமின்றி அங்கு மீன்பிடிக்க வழி செய்ய வேண்டும். இவ்வேண்டுகோளுக்குப்பின்னும், மேலும் ஒரு முறை இலங்கை அரசு ஒப்பந்தத்தை மீறினால், இந்திய அரசுக்கு உண்மையாகவே தன் குடிமக்களின்மீது அக்கரையிருக்குமேயானால், இலங்கையுடனான நல்லுறவை துறந்து, சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும்”
இவ்வாறாக முடிகிறது.
நாமும்  நம்மாளால் முடிந்த இதையாவது  செய்வோம்!
இனைய முகவரி: http://www.petitiononline.com/TNfisher/petition.html

LinkWithin

Blog Widget by LinkWithin