திங்கள், 4 ஏப்ரல், 2011

கிரிக்கெட் உலக சாம்பியனாக வரலாறு படைத்ததுடன் புதிய உலக சாதனையும் படைத்துள்ளது நமது இந்தியா


10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது நமது இந்தியா.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது



1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து இப்போது தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.

இந்த முறை கோப்பையை வென்றதன் மூலம் கோப்பையை நடத்திய நாடுகள் அதன் சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி புதிய சாதனைப் படைத்துள்ளது



இந்திய அணியின் வெற்றி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், உரக்கக் குரல் எழுப்பியும் கொண்டாடினர். 1983-ல் இந்தியா கோப்பையை வென்றபோது ஏற்பட்ட அதே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் இந்தியா முழுவதும் காண முடிந்தது.

சனி, 2 ஏப்ரல், 2011

கிரிக்கெட் உலக கோப்பை 2011 நமக்கே !

இந்த 2011 கிரிக்கெட் உலக கோப்பை நமக்கு தான் என்று நினைக்க தோன்றுகிறது. ஏன் என்றால் கடந்த 1983 ஆம் வருட காலண்டரும் 2011 ஆம் வருட காலண்டரும் ஒரே மாதிரி உள்ளத்தால் இது கூட ஒரு காரணம் என்று சொல்லலாம்.




ஆனால் எல்லாம் வல்ல இறைவனின் நாட்டம் என்ன? என்பதை யாரும் அறியாத ஒன்று என்பது தெளிவான விஷயம் ஆகும்.

LinkWithin

Blog Widget by LinkWithin