புதன், 14 அக்டோபர், 2009

தீபாவளி நெரிசல் - சென்னையில் இரவு விடிய விடிய பஸ்கள்

தீபாவளிப் பண்டிகைக்காக ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்க வரும் மக்கள் கூடடம் அலை மோதுவதால் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் தி.நகருக்கு விடிய விடிய டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 100 பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்கவுள்ளது.

சென்னை நகரில் தீபாவளி வெப்பம் அதிகரித்துள்ளது. ஜவுளிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கும் மும்முரத்தில் மக்கள் பெருமளவில் நகரின் முக்கியப் பகுதிகளில் குவிந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு பொருட்கள் வாங்கும் பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்து வசதிகளை செய்து வருகிறது.

பிராட்வேயில் இருந்து கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திற்கு சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன.

வழக்கமாக ஓடும் பஸ்களை விட கூடுதலாக 100-க்கும் மேலான பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

தியாகராயநகர், வட பழனி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கூடுதல் சேவை இயக்கப்படுகிறது. கூட்டம் எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை பார்த்து அதற்கேற்ப பஸ்களை விடவுள்ளனர்.

15 மற்றும் 16 ஆகிய இரு நாட்களும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin