செவ்வாய், 14 ஜூலை, 2009

திருநெல்வேலி மூவேந்தர் முன்னணி நிர்வாகி வெட்டிக் கொலை

திருநெல்வேலி அருகே மூவேந்தர் முன்னணி நிர்வாகி இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.


திருநெல்வேலி அருகேயுள்ள மேலநத்தத்தைச் சேர்ந்தவர் சிவசாமி(46). மூவேந்தர் முன்னணியின் திருநெல்வேலி மாநகர செயலாளராக இருந்து வந்தார். இன்று காலை மேலநத்தம் ரயில்வே கேட்டை ஒட்டிய கடையில் அவர் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிச்சாண்டி என்பவர் உள்ளிட்ட 3 பேர் அங்கு வந்து சிவசாமியிடம் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.


இந்தத் தகராறில் பிச்சாண்டி உள்ளிட்டோர் சிவசாமியை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சிவசாமி இறந்தார். இந்நிலையில், சிவசாமியின் ஆதரவாளர்கள் மேலநத்தத்தில் உள்ள பிச்சாண்டியின் உறவினர் வீடுகளைச் சூறையாடினார். இந்தச் சம்பவங்களால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin