வியாழன், 25 ஜூன், 2009

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2-ந்தேதி உள்ளூர் விடுமுறை; தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறும் இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 11.7.2009 (சனிக்கிழமை) அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் பணிபுரிய ஆணை பிறப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். அவரது கோரிக்கையை ஏற்று 2-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 11.7.2009 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறி விக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin